புதன், 9 ஏப்ரல், 2014

அனுதாபம்


என்  நண்பன் கூறுகிறான் என்னவள்
     இன்னொருவனுடன் நிட்சயிகபட்டுவிட்டால் என்று
இதை விட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்

அவள் முகபுத்தகத்தில் பதிந்த பதிப்பால்
     அனைவரிடமும் வாழ்த்துக்கள் பெற்றாள்
நான் பிறரின் அனுதாபம் பெற்றேன்

அந்த வெகுளி பெண்ணிற்கு தெரியவில்லை
     வாழ்த்து  மகிழ்ச்சியை பெருக்கும்
அனுதாபம் வாழ்க்கையை வெறுப்படைய செய்யும் என்று

என்னவளே நீ கேட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்தேன்
     இப்பொழுது இன்னொரு வாழ்க்கை வேண்டும் என்றாய்
அதையும் உனக்காக கொடுத்தேன் பெண்ணே

இது போதும் எனக்கு இது போதுமே
     நீ கேட்ட அனைத்தையும் கொடுத்துவிட்டேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக