உன் கூந்தலில் என் மனதை கரைத்தாயடி
உன் விழியன் ஓரத்தில் உயிர் சொக்கி போனேனடி
உன் கன்னக்குழியில் என்னை நான் இழந்தேனடி
உன் பார்வையில் நான் பைத்தியம் ஆனேனடி
உன் சிரிப்பினில் என்னை சிக்கவைத்து சிதைத்தாயடி
உன் கண்ணீரில் என் உள்ளம் நனைத்தாயடி
உன் தொண்டைகுழியில் நான் உயிர் சிக்கி தவித்தேனடி
உன் தோளினில் என் கவலைகள் மறந்தேனடி
உன் இடையினில் என் இதய துடிப்பை நிறுத்தினாயடி
உன் மடியினில் நான் மயங்கி போனேனடி
உன் கைகள் கோர்த்து இந்த உலகத்தை மறந்தேனடி
உன் பாதங்களில் என் பாதை காட்டிச்சென்றாயடி
உன் கனவினில் நான் நிஜமாய் வாழ்ந்தேனடி
என் உயிரே! என் அன்பே! என் அன்பே!!! ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக