வியாழன், 17 ஏப்ரல், 2014

காதல் அனுபவம்

அன்று என்னை பாவா என அழைத்தவள்
இன்று என்னை பாவம் செய்த மனிதனாக பார்க்கிறாள்

காரணம் அவள் மனதை கெடுத்து உள்ளே நுழைந்ததற்காக
அவள் வேணாம் என்று சொல்லும் போதே
அவள் போக்கில் விட்டிருக்க வேண்டும்

ஆனால் இன்றோ அவளை குற்ற உணர்சிக்கு ஆளாக்கி
இன்னொருவனுடன்  சேர்த்து வைக்க முயற்சிகின்றேன்

அவள்  மனம் மாறவில்லை என்பதை நன்கு அறிவேன்
எனக்காகதான் அவள் தன்  வாழ்க்கையை பணயம் வைக்கிறாள்

அவள் நினைக்கிறாள் அவள் மேல் வெறுப்பை உண்டாக்கினாள்
நான் பிரிந்துவிடுவேன் என்று
பாவம் அவளுக்கு தெரியவில்லை என் மனம் அவளை
வெறுக்காது என்று

என் காதல் நான் வாழும் வரை அல்ல என் இனியவளே
நான்  உன் மனதில் வாழும் வரை அது என்றும் அழியாது

இன்று நான் நம் கனவுகளோடு வாழ முயற்சிக்கிறேன்
நாளை நீ உன் கணவனோடு வாழ முயற்சி செய்ய போகிறாய்

வாழ்த்துக்கள் என்னவளே நீ இதிலாவது வெற்றி பெற வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக