நீ வரைந்த ஓவியம் எந்தன் பெயரடி
உன் கை பட்டதால் அடைந்தேன் பிறவி பலனையடி
உன்னை விட்டு கொடுக்க மனமில்லயடி
உயிர் என்னை விட்டுவிட துடிக்குதடி
உந்தன் முத்தத்தால் உயிர் நனைத்தாயடி
பின்பு என்னை விட்டுவிலக நினைத்தாயடி
உன்னை பதி என நான் எண்ணி வந்தேன்
என்னை விதியின் போக்கினில் விட்டு விட்டாய்
நீ இல்லாமல் நான் இல்லையடி
உந்தன் சிந்தைக்கு ஏன் இது எட்டவில்லை
சொல்லடி நீ வந்து என் கண்ணின் முன்னே
முடிந்ததடி எந்தன் விதி
இனி தொடறது எந்தன் சதி ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக