திங்கள், 31 மார்ச், 2014

உறவு

எங்கே எப்போ நான்  என்னை உன்னிடம் தொலைதேனோ தெரியவில்லை
உன்னை விட்டு போக எனக்கும் மனமில்லை
தேவை மட்டும் உன் உறவு என்று என் மனம் சொல்லுதடி
உறவு எனும் வட்டத்தில் நீ சிக்கிக்கொள்ள
யாரிடத்தில் சென்று நான் மெய்பிபேன் நீ என்னவள் என்று
உன் உறவுகளை பிரிக்க  நான் திட்டமிட்டு செய்த சதி அல்ல
அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு உனக்கும் காலம்  இல்லை
நம் வாழ்கையில் போராட கூட களம் இல்லையே....

ஞாயிறு, 30 மார்ச், 2014

நினைவுகள்


என் கண் முன்னே நீ நின்றாய்
உன்னை பார்த்ததும் நான் வாழ்வேனோ
இல்லைமண்ணோடு  வீழ்வேனோ
உந்தன்  நினைவுகளிள், காற்றோடு நான்  கரைந்து போவேனோ
அடி என் உயிரே, சொல் நீ உந்தன்  பதிலை...

உன்னோடு நான்

நீ என்னோடு இல்லை என்றாலும் 
       உன் நினைவு என்றும் என்னை விட்டு அழிவதில்லை 

உன் நினைவை வைத்து நான் உருவாக்கிய கற்பனை உலகம்
        அங்கு யாருக்கும் அனுமதி இல்லை 

அங்கு நீயும் நானும், நமக்காக  காத்திருந்த நம் வாழ்க்கை
           மகிழ்சிக்கு குறைவில்லை          

இது போதுமடி, வேறன்ன வேண்டும்  எனக்கு 
          உன்னோடு நான், என்றும் நம் நினைவிலேயே  வாழுவேன் ...

அவளின் பிரிவு


என்  நினைவில் இருந்து, என்றும் நீங்காத என் இனியவள் 
எனக்கு கொடுத்த பரிசு பிரிவு ....

என் உயிரைவிட பெரிதாய் நினைத்த அவள்,
 என்னை விட்டு பிரியும் போது தான் தெரிந்தது 
பிரிவின்  வலி ....


நான் இன்றி அவள் இல்லை, 
அவள் இன்றி அணுவும் இல்லை....